30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க்கும் கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி!

119

சென்னை.

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
1992ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய ’ராசுகுட்டி’ படத்தில், பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தில் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். Olympia Movies சார்பில் தயாரிப்பாளர்  S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள்  நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு,  மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக  நடந்து வருகிறது.

பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால்,  படத்தின் மீது ஏற்கனவே  எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.