’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விமர்சனம்!

92

சென்னை:

காமெடி நடிகர் வடிவேலு, ஆனந்தராஜ்,  முனிஷ்காந்த்,  ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி ஷிவானி வேல்ஸ் ராமமூர்த்தி சச்சு ஆகியோர் நடித்த படம் தான் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”.  இப்படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார்.  லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும்,  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.

வடிவேலுவின் தந்தை வேலராமமூர்த்திக்கு பைரவர் கடவுள் மீது பக்தி அதிகம்.  இந்த சூழ்நிலையில் அவர் பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கும்போது அங்கு ஒரு நாய் அவருக்கு கிடைக்கிறது.  அந்த நாயை தன் வீட்டிற்கு எடுத்து  வந்து வளர்க்கிறார். அந்த நாய் வந்த அதிர்ஷ்டம் வேல.ராம மூர்த்தி பெரிய பணக்காரர் ஆகிவிடுகிறார்.  ஆனால் அந்த நாய் தொலைந்த பிறகு மிகுந்த கஷ்ட நிலையில் வடிவேல் குடும்பத்தினர் வறுமையில் வாடுகிறார்கள்.  இதனால்  கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்ட வடிவேலு பெரிய பெரிய நல்ல ஜாதி நாய்களை கடத்தி அதை நல்ல விலைக்கு விற்று வாழ்க்கையை நடத்துகிறார்.  அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். பெண்களை கடத்தி பணம் சம்பாதிக்கும் ஆனந்த் ராஜ்,  தனது நாயை திருடிய வடிவேலுவை மிரட்டுகிறார். வடிவேலு வீட்டில் இருந்த அதிசய நாயை அவரது வீட்டு வேலைக்காரன் திருடி சென்று விட்டதால்தான் தங்களுக்கு இந்த வறுமை நிலை ஏற்பட்டது என்று அவரது பாட்டி சச்சு சொல்ல திருடப்பட்ட அந்த நாயை வடிவேலு கண்டுபிடிக்க முயல்கிறார். அவர் அந்த நாயை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின்  மீதி கதை.

காமெடி கதாநாயகனாக  நீண்ட இடைவெளிக்குப் பிறகு களத்தில் இறங்கியிருக்கும் வடிவேலு படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை தனது வழக்கமான பாணியில்,  சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். தன் நடிப்பாலும் வசனங்களாலும் தான் ஒரு காமெடி கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இருந்தாலும்  சில காட்சிகளில் வடிவேலு தன் உடல் மொழியால் பல சேஷ்டைகளுடன்,  காமெடி  செய்தாலும் ரசிகர்கள்  மத்தியில் சிரிப்பு வரவில்லை. வடிவேலு வந்து நின்றாலே சிரிக்கும் நம் ரசிகர்கள், பல இடங்களில் அமைதியாக இருப்பது பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது. நாய்களின் உரிமையாளர்களிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்குவது, நக்கலுடன் நய்யாண்டி செய்வது என்று தனது காமெடி பாணியில் சிரிக்க வைக்கும் பணியை மிக சரியாகவே செய்து இருக்கிறார். ஆனால் வடிவேலு,  “இதோ மீண்டும் வந்து விட்டேன்” என்று சொல்லும் அளவிற்க்கு அனைத்து ரசிகர்களையும்  சிரிக்க வைத்து தன் காமெடி நடிப்பால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

நாய்களை கடத்தி பணக்காரனாக நினைக்கும் நாயகன், வடிவேலுவின் காமெடியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மத்தியில் பெண்களை கடத்தும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.ரெடின் கிங்ஸ்லி வரும்போதெல்லாம் பார்வையாளர்கள் உற்சாகமாகி சிரித்து கைத் தட்டுகிறார்கள்.

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, யூடியூபர் பிரசாந்த், ராமர், சச்சு, பூச்சி முருகன், ராவ் ரமேஷ், மனோபாலா, முனீஸ் காந்த், ஷிவானி, ஆகியோர் கதையை தொய்வில்லாமல் நகர்த்துவதற்கு  தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் கலர்புல்லாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்க்கு பலம் சேர்த்து இருக்கிறது.

படம் முழுக்க காமெடியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சுராஜ், வழக்கமாக அவரது பாணியை மாற்றிக் கொண்டு, வடிவேலுடன் இணைந்து, தற்போது வந்துக் கொண்டிருக்கும் படங்களின் டிரெண்டுக்கு ஏற்றவாறு, புதிய நடிகர்களை பயன்படுத்தி நாய்களை கடத்தும் நாயகனை மையமாக வைத்து குடும்பத்தோடு ரசிக்கும்படி நகைச்சுவையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுராஜ். அவருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  படம் காமெடி ரசிகர்களுக்கு விருந்து!

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.